25 ஆவது அகவையில் தடம் பதிக்கின்றது சக்தி FM

by Staff Writer 20-11-2023 | 4:22 PM

Colombo (News 1st) இலங்கை வானொலி வரலாற்றில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு புரட்சியை ஏற்படுத்திய நாள் இன்றாகும்.

நேயர்களின் நாடித் துடிப்பறிந்து முதற்தர நிகழ்ச்சிகளை படைத்துவரும் சக்தி FM, தனது 25 ஆவது பிறந்த நாளை இன்று(20) கொண்டாடுகின்றது.

1998 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 20ஆம் திகதி வானொலி புரட்சியின் புதியதோர் அத்தியாயமாக சக்தி FM உதயமானது.

அன்று முதல் இன்று வரை தனக்கேயுரிய தனியான பாணியில் மாற்றங்களுக்கேற்ப நிகழ்ச்சிகளை வழங்குவதில், தமிழ் பேசும் மக்களின் சக்தியாக சக்தி FM வலம் வருகின்றது.

வானொலி நிகழ்ச்சிகளுக்கு மேலதிகமாக மக்கள் சேவையின் ஊடாகவும் நேயர்களின் இதயங்களில் தனியிடத்தை தக்கவைத்துக் கொண்டே சக்தி FM இற்றை வரை வெற்றிநடை போடுகின்றது. 

மக்களுக்கு பயன்தரும் பல்வேறு நிகழ்ச்சிகளைக் காலத்திற்கேற்ப ஒலிபரப்பி வருவதுடன், அனர்த்தங்களுக்கு உள்ளாகும் மக்களுக்கு குரல் கொடுத்து உதவிக்கரம் நீட்டுவதற்கும் சக்தி FM எப்போதும் பின்நிற்பதில்லை.

இலத்திரனியில் ஊடகத்துறையின் வானலைப் புரட்சியாய், இன்னும் பல புதுமைகள் படைத்து, மக்கள் சேவையைத் தங்கு தடையின்றி தொடர, சக்தி வானொலிக்கு நியூஸ்ஃபெஸ்ட்டின் ஆத்மார்த்தமான பிறந்தநாள் வாழ்த்துகள்...