எதிர்வரும் தினங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் தினங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்

by Bella Dalima 29-09-2022 | 3:48 PM

Colombo (News 1st) நாட்டின் தென்மேற்கு பிராந்தியத்தின் சில பகுதிகளில் எதிர்வரும் தினங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, காலி , மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.