by Staff Writer 21-12-2020 | 3:05 PM
Colombo (News 1st) Boeing 737 Max ரக விமானங்கள் தற்போது பயணத்திற்கு பாதுகாப்பானதென ஐரோப்பிய வான்கட்டுப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய வான் போக்குவரத்து பாதுகாப்பு முகவரமைப்பின் தலைவர் பட்றிக் கை (Patrick Ky) இதனை தெரிவித்துள்ளார்.
எந்தவொரு பிரச்சினையும் மீளெழாதவாறு நிறுவனம் 737 Max ரக விமானங்களின் பிரச்சினைகளை சரிசெய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தயாரிப்பாளர்களால் மேற்கொள்ளப்பட்ட விமானத்தின் வடிவமைப்பு மாற்றம் தொடர்பான ஆய்வுகள் மற்றும் விமானத்தின் மீளாய்வுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.